ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ. பி.எல் போட்டி!
கொரோனா பரவலால் ஒத்திவைக்கபட்ட ஐ. பி. எல் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஐ. பி.எல் குழு.தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.செப்டம்பர் 19 ஆம்தேதி தொடங்கி 50 நாட்கள் மேல் தாண்டி நவம்பர் 8 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
விரைவில் ஐ. பி. எல் போட்டிகள் நடைபெறும் ஸ்டேடியம், நாள், நேரம் குறித்த அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இன்னும் 10 நாட்களில் வீரர்களுக்காண விதிமுறைகள் குறிப்பிடப்படும் என்றும் ஐபில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து தடைபட்டுள்ள இந்த கொரோனா காலக்கட்டத்தில், இந்தியா உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்து கிரிக்கெட் ரசிகர்கள் வருவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. உள்நாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா போன்ற விவரங்களும் விரைவில் தெரிய வரும்.