ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு – பிசிசிஐ அதிரடி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சீனாவின் உகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விமான சேவை ரத்து, விசாக்கள் வழங்க தடை ஆகிய
 

ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு – பிசிசிஐ அதிரடிகொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் உகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

விமான சேவை ரத்து, விசாக்கள் வழங்க தடை ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வீரர்கள் வரமுடியாது என்பதாலும், ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழல் உருவாகும் என்ற காரணத்தாலும், குறிப்பாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

http://www.A1TamilNews.com

From around the web