திருநங்கைகளுக்கென தனி பல்கலைக்கழகம்

நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கென தனி பல்கலைக்கழகம் உத்தரபிதேச மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்திய திருநங்கைகள் கல்வி சேவை அறக்கட்டளை என்ற அமைப்பு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. உத்தரபிரதேசம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள பசில்நகரில் தொடங்கவிருக்கும் இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது. இங்கு திருநங்கைகள் 1 ஆம் வகுப்பு முதல் பி.ஹெச்.டி வரை படிக்கலாம். ஜனவரி 15 ஆம் தேதி, 2 குழந்தைகளுடன் முதல் வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இதர வகுப்புகள் மார்ச்
 

திருநங்கைகளுக்கென தனி பல்கலைக்கழகம்நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கென தனி பல்கலைக்கழகம் உத்தரபி‌தேச மாநிலத்தில் தொ‌டங்கப்பட உள்ளது.

இந்திய திருநங்கைகள் கல்வி சேவை அறக்கட்டளை என்ற அமைப்பு இதற்கான பணிகளை‌ மேற்கொண்டு வருகிறது. உத்தரபிரதேசம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள பசில்நகரில் தொடங்கவிருக்கும் இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது.

இங்கு திருநங்கைகள் 1 ஆம் வகுப்பு முதல் பி.ஹெச்.டி வரை படிக்கலாம். ஜனவரி 15 ஆம் தேதி, 2 குழந்தைகளுடன் முதல் வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இதர வகுப்புகள் மார்ச் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

https://www.A1TamilNews.com

 

From around the web