ஆப்கானிஸ்தானில் பெண்ணிடம் அத்துமீறல்.. இந்தியரிடம் அமெரிக்காவில் விசாரணை!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் பெண்ணிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட இந்தியர் அமெரிக்காவில் ராணுவச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் ஃபென்டி ராணுவ முகாமில், அமெரிக்க ராணுவ ஒப்பந்தக்காரரிடம் ஊழியராக வேலை பார்த்து வந்த 35 வயது லோகேஷ் நாயக், 24 வயது அமெரிக்கப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தினர் அவரை ஆப்கானிஸ்தானில் கைது செய்துள்ளனர். அமெரிக்க மாஜிஸ்ட்ரேட் ஹார்வி முன்பு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணை நடைபெற்றது. அவரை காவலில் வைத்து
 

ஆப்கானிஸ்தானில் பெண்ணிடம் அத்துமீறல்..  இந்தியரிடம் அமெரிக்காவில் விசாரணை!ப்கானிஸ்தானில் அமெரிக்கப் பெண்ணிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட இந்தியர் அமெரிக்காவில் ராணுவச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஃபென்டி ராணுவ முகாமில், அமெரிக்க ராணுவ ஒப்பந்தக்காரரிடம் ஊழியராக வேலை பார்த்து வந்த 35 வயது லோகேஷ் நாயக், 24 வயது அமெரிக்கப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தினர் அவரை ஆப்கானிஸ்தானில் கைது செய்துள்ளனர். அமெரிக்க மாஜிஸ்ட்ரேட் ஹார்வி முன்பு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணை நடைபெற்றது.

அவரை காவலில் வைத்து இருக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, தொடர் விசாரணைக்காக அமெரிக்காவுக்கு அழைத்து வருமாறும் ஆணை பிறப்பித்துள்ளார். அதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவ விமானத்தில் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்ட லோகேஷ் நாயக், ராணுவச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவ விசாரணைச் சட்டத்தின் படி, இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது. 24 வயது அமெரிக்கப் பெண்ணின் அறைக்குள் அத்து மீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக லோகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

 

From around the web