கொரோனா 3-வது அலை இந்தியாவில் எப்போது உச்சம் அடையும்..? ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு

 
Corona

இந்தியாவில் கொரோனா 3-வது அலை அக்டோபர், நவம்பரில் உச்சம் அடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை அக்டோபர், நவம்பரில் உச்சம் அடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், 2-வது அலையைப் போல கடும் பாதிப்பை ஏற்படுத்தாது. 2-வது அலையில் ஏற்பட்ட பாதிப்பில் 4-ல் ஒரு பங்குதான் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

ஐஐடி-கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பேர் கொண்ட குழுவில் அங்கம் வகித்த மகிந்திரா அகர்வால் கூறுகையில், “ஒரு வேளை, புதிதாக அதிதீவிர கொரோனா உருமாற்றமடையாவிட்டால், நிலைமை மோசமடைய வாய்ப்பில்லை நாட்டில் கொரோனா 3-ம் அலை உருவானாலும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகலாம், 2-ம் அலை போல அதிகபட்சமாக 4 லட்சம் பேர் வரை கொரோனா உறுதி செய்யப்பட்டது போல நேரிடாது” என்றார்.

From around the web