கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16.3 லட்சத்தை தாண்டியது

 
கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16.3 லட்சத்தை தாண்டியது

இன்று ஒரே நாளில் 31,950 பேருக்கு கொரோனா பாதிப்பு என கேரளா அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பாதித்தவர்கள் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 31,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கேரளாவில் இதுவரை தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 16,38,769 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 49 பேர் உயிரிழந்தனர், இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,405 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு தற்போது 3,39,441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 16,296 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 12,93,590 ஆக உயர்ந்துள்ளது என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.

From around the web