வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்; பேரணியாக சென்ற விவசாயிகள் மீது பாஜக எம்.பி கார் மோதியதில் ஒருவர் காயம்

 
Haryana

ஹரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பாஜக எம்.பி. நயாப் சைனியின் கார் மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் பகுதியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி அதன் தாக்கம் குறைவதற்குள் ஹரியானாவில் பாஜக எம்.பி ஒருவர் விவசாயிகள் மீது மீண்டும் காரை மோதியுள்ளார்.

ஹரியானா மாவட்டம் அம்பாலா மாவட்டம் நாராயண்கர் என்ற இடத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அம்பாலா தொகுதி பாஜக எம்.பி நயாப் சைனி கார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மோதியுள்ளது.

பாஜக எம்.பி-யின் கார் மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

From around the web