ஒன்றிய அரசிடம் வெற்று பேச்சு இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை - ராகுல் காந்தி

 
Rahul-Gandhi

வெற்று பேச்சு இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருகிறது. டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு ஆகிய மாநில முதல்வர்கள் தடுப்பூசி வேண்டி பிரதமருக்கு கடிதம் எழுதிய வண்ணம் உள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்நிலையில், வெற்று பேச்சு இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஒன்றிய அரசு வெற்று பெருமைக்காக பல அறிவிப்புகளை வெளியிடுகிறது. தடுப்பூசி திட்டம் மந்தமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web