26-ம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை..!

 
26-ம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை..!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 26-ம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக இயங்காது என அறிவிப்பு.

புதுவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த புதுவை அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது நாள்தோறும் இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், வரும் 26-ம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா தொற்றுக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், அதிதீவிர சிகிச்சையும், உயர் அழுத்த பிராணவாயு தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளதால் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ பணியாளர்கள் அந்த நோயாளிகளை கவனிக்க தேவைப்படுகிறாரகள் என கூறியுள்ளனர்.

எனவே, கொரோனா நோயாளிகளை பாதுகாக்கவும் வெளிப்புற நோயாளி பிரிவிற்கு வரும் கொரோனா இல்லாத நபர்களை பாதுகாக்கவும், தொற்று பரவலை தடுக்கவும் வரும் 26-ம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்துவித நேரடி வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது என அறிவித்துள்ளனர்.

மேலும், அனைத்து அவசர மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை சேவைகள் வழக்கம்போல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

From around the web