நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை என வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை - நிர்மலா சீதாராமன்

 
Nirmala-Sitharaman

இந்தியா ஒரு மின் உபரி நாடு என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக பல்வேறு மாநிலங்களும் ஒன்றிய அரசிடம் முறையிட்டது.

இந்த நிலையில், நிலக்கரி பற்றாக்குறை என வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது,

“இந்தியா ஒரு மின் உபரி நாடு. மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக பரவும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றது.

அமைச்சரின் அறிக்கையின்படி மின்சாரம் தயாரிக்கும் ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு அந்தந்த ஆலைகளிலேயே உள்ளது. நாட்டின் நிலக்கரி  விநியோகச் சங்கிலியில் எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.

From around the web