தமிழ் மொழியில் வெளியானது தேசிய கல்விக் கொள்கை!!

 
தமிழ் மொழியில் வெளியானது தேசிய கல்விக் கொள்கை!!

தேசிய கல்விக் கொள்கையை மத்திய கல்வித்துறை அமைச்சகம் தமிழ் மொழியில் வெளியிட்டது.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள 1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட பழமையான தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக கடந்த ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டது.

இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. அதனைத்தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது. இதற்கு பல மாநில அரசுகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் புதிய தேசிய கல்வி கொள்கை, மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து மத்திய அரசு பதிவேற்றம் செய்தது.

அதில், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய தேசிய கல்வி கொள்கை மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் அதில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. தேசிய கல்விக் கொள்கை மொழிப்பெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கையை மத்திய கல்வித்துறை அமைச்சகம் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது.

From around the web