செல்லப்பிராணியுடன் மாயமான 23 வயது பெண்.! பெண்ணை தேடி காட்டுக்குள் சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

 
Jyoti

செல்லப்பிராணியுடன் சேர்ந்து ஒரு மாதத்துக்கு முன்னர் காணாமல் போன இளம்பெண் காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் பராரு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 23). இவர் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வீட்டில் உள்ள நாயுடன் சேர்ந்து காணாமல் போனார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் ஜோதியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அங்குள்ள காட்டில் ஜோதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை இரு நாட்களுக்கு முன்னர் போலீசார் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

ஜோதியை அவர் கணவர் தான் கொலை செய்துவிட்டார் என கூறி அவர் பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினார்கள்.

அவர்கள் கூறுகையில், ஜோதி காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கணவருடன் அவருக்கு சண்டை ஏற்பட்டது.

இதையடுத்தே ஜோதி காணாமல் போனார், அவருடன் சென்ற நாய் அடுத்த ஐந்து நாட்களில் வீட்டுக்கு வந்துவிட்டது. ஜோதியின் கணவர் தான் அவளை எதாவது செய்திருக்க வேண்டும் என கூறினர்.

இதையடுத்து ஜோதியின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர், அவரிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் விரைவில் சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web