உத்தர பிரதேசத்தில் இணைய தள சேவை முடக்கம்... முன்னெச்சரிக்கை நடவடிக்கையா?

 
Internet

வன்முறையில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி, சிதாபூர் நகரில் தான் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி, சிதாபூரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  

இந்த நிலையில், லகிம்பூர் கேரி மற்றும் சிதாபூர் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இணைய சேவை முடக்கம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, இன்று லகிம்பூர் கேரி மாவட்டம் வர திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி, சிதாபூர் சென்று தனது சகோதரி பிரியங்கா காந்தியையும் சந்திக்க உள்ளார். எனினும், ராகுல் காந்தி லகிம்பூர் கேரி வர அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.

From around the web