ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியதா..? ஒன்றிய அரசு விளக்கம்

 
Air-India

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியதாக வெளியான தகவலுக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்த விற்பனை நடவடிக்கை கொரோனா தொற்று காரணமாக தாமதமானது.

பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இந்த பணிகளை முடுக்கி விட்ட ஒன்றிய அரசு, இதற்கான இறுதி ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு செப்டம்பர் 15-ந் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இதில்,  ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்து.

இதற்கிடையில், ஏர் இந்தியாவை வாங்கும் டாடா குழுமத்தின் ஏல திட்டத்தை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில் ஏர் இந்தியாவை ஏலத்துக்கு விட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியதாக ஊடகங்களில் கூறப்படுவது தவறான தகவல் எனவும் ஏர் இந்தியாவை ஏலத்துக்கு விட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web