புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிப்பு
Jul 15, 2021, 22:11 IST
புதுவையில் சுற்றுலா தளங்களில் 50 சதவிகித நபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புதுவையில் தற்போதைய கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுற்றுலா தளங்களில் 50 சதவிகித நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
- புதுச்சேரிக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை.
- சினிமா, தியேட்டர்கள் திறக்க அனுமதியில்லை
- அனைத்து வகையான கூட்டங்களுக்கு அனுமதியில்லை
- இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும்
- தனியார் நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்
- பஸ், ஆட்டோ, டாக்சி, அரசு, தனியார் பொதுபோக்குவரத்து கொரோனா விதிகளை பின்பற்றி செயல்பட அனுமதி
- அனைத்து கடைகள் குளிர்சாதன வசதி இன்றி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி
- காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி
- கடற்கரை சாலை பகுதியில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம்
- பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி
- உடற்பயிற்சி, யோகா நிறுவனங்கள் 50 சதவிகித நபர்களுடன் செயல்பட அனுமதி
- 50 சதவிகித இருக்கை வசதியுடன் உணவகங்கள் செயல்படலாம்
- டீக்கடைகள், பழச்சாறு கடைகள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும்
- மதுபான கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி
- திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் பங்கேற்க அனுமதி
- இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேர் பங்கேற்க அனுமதி
- பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதி
- திரைப்பட, டிவி நிகழ்ச்சி சூட்டிங் 100 பேருடன் நடைபெற அனுமதி
- இதர செயல்பாடுகளான அவசர தேவைகளான மருத்துவம், தேர்வு, திருமணம், வேலைவாய்ப்பு நேர்காணல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை
- பொருட்களை கொண்டு செல்லுதல் மற்றும் இ-காமர்ஸ் நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை
- அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கு நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை
- விவசாயம், அரசு அலுவலகங்கள் நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை
இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.