சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு

 
CBSE

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1-ம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

From around the web