பாஜக எம்.பி. வீடுக்கு வெளியே வெடிகுண்டு வீச்சு.. உட்கட்சி மோதலா..?

 
West-Bengal

பாஜக எம்.பி. அர்ஜூன் சிங்கின் வீட்டுக்கு வெளியே மர்ம நபர்கள் 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேற்கு வங்கம் பாரக்பூர் தொகுதி பாஜக எம்.பி.யாக இருப்பவர் அர்ஜூன் சிங். திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த அவர், கடந்த 2019-ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அர்ஜூன் சிங் வீடு  கொல்கத்தாவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள ஜகதால் பகுதியில் உள்ளது. இன்று காலை 6:30 மணியளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள், அர்ஜூன் சிங் வீட்டருகே 3 வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கதவுகள் லேசாக சேதம் அடைந்தன. அர்ஜூன் சிங், தற்போது டெல்லியில் உள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில ஆளுநர் ஜக்தீப் தங்கார், மேற்கு வங்கத்தில் வேண்டுமென்றே நடக்கும் வன்முறை சம்பவங்கள் குறைவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.

பாஜக எம்.பி. அர்ஜூன் சிங் வீட்டருகே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், சட்டம் ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் என பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் குற்றம்சாட்டி உள்ளார். இதனை மறுத்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

From around the web