இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள்.. புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம் - பிரதமர் மோடி

 
PM-Modi-innagurates-2nd-campus-in-cancer-institute-kolkatta

இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2வது வளாகத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதன் பின் பேசியதாவது, “இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. சாதனை படைத்த நாட்டின் விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், சுகாதாரத்துறையினருக்கு நன்றி.

அடுத்த 5 நாட்களில் 15 - 17 வயதுடைய 1.5 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளோம்.

18 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.  நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

From around the web