தமிழ்நாட்டிற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

 
Harsh-vardhan

தமிழ்நாட்டிற்கு 1 கோடிக்கும் கூடுதலாக கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மே 1-ந் தேதியில் இருந்து 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  மத்திய அரசிடம் இருந்து இலவச கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது என சில ஊடகங்களில் வெளியான தகவலை முன்னிட்டு மத்திய சுகாதார அமைச்சகம் அதற்கு பதிலளித்துள்ளது.

இதன்படி, ஜூன் 2-ந் தேதி வரை, தமிழ்நாட்டிற்கு 1 கோடிக்கும் கூடுதலாக கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.  அவற்றில் 93.3 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டின் கையிருப்பில் 7.24 லட்சம் டோஸ்கள் உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதேபோன்று, ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் 7.48 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசின் வழியே கிடைக்கும்.

வருகிற ஜூன் 15-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கிடைக்க பெறும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

From around the web