காரடையான் நோன்பு அடை எப்படி செய்வது?

காரடையான் நோன்பு கொண்டாட, வெல்ல அடை, உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம். பச்சரிசி அரை கிலோவை அரைமணிநேரம் ஊற வைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும்.வாசனை வரும்வரை வறுக்க வேண்டும். 1.வெல்ல அடை: தேவையான பொருட்கள்: வறுத்த பச்சரிசி மாவு -1 கப் காராமணி -1/2 கப் தேங்காய் -1/2கப் வெல்லம்- 3/4 கப் ஏலக்காய் -1 டீஸ்பூன் செய்முறை: காராமணியை வறுத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள
 

காரடையான் நோன்பு அடை எப்படி செய்வது?

காரடையான் நோன்பு கொண்டாட, வெல்ல அடை, உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.

பச்சரிசி அரை கிலோவை அரைமணிநேரம் ஊற வைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும்.வாசனை வரும்வரை வறுக்க வேண்டும்.

1.வெல்ல அடை:
தேவையான பொருட்கள்:
வறுத்த பச்சரிசி மாவு -1 கப்
காராமணி -1/2 கப்
தேங்காய் -1/2கப்
வெல்லம்- 3/4 கப்
ஏலக்காய் -1 டீஸ்பூன்

செய்முறை:

காராமணியை வறுத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் ,இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
“தள தள” என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்க வேண்டும்.

மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்க வேண்டும்.

2.உப்பு அடை:
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு- 1 கப்
காராமணி -1/2 கப்
தேங்காய் – 1/2 கப்
இஞ்சி -1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்- 1
உப்பு – தேவையான அளவு
எண்ணைய்- தேவையான அளவு
கடுகு- 1டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-1டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்-1சிட்டிகை
கறிவேப்பிலை-1ஆர்க்கு

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணைய் விட்டு கடுகு,உ.பருப்பு தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்தவுடன் காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை தூவிக்கொண்டே கிளற வேண்டும்.

மாவு நன்றாக வெந்த உடன், வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் வேக விட்டு எடுக்க வேண்டும். கார அடை ரெடி.

http://www.A1TamilNews.com

From around the web