கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வீடு, வீடாக கையேடு வழங்கும் திட்டம்! தமிழக அரசு அதிரடி!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாகச் செயல்பட்டு வந்த போதிலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் கொரோனாவிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் கையேடு ஒன்றை உருவாக்கியுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் கொரோனா வைரஸ் பற்றியும்,அறிகுறிகள், தடுப்பு முறைகளின் விளக்கம், பரிசோதனை முறைகள், இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வீடு, வீடாக கையேடு வழங்கும் திட்டம்! தமிழக அரசு அதிரடி!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாகச் செயல்பட்டு வந்த போதிலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் கொரோனாவிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் கையேடு ஒன்றை உருவாக்கியுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கையேட்டில் கொரோனா வைரஸ் பற்றியும்,அறிகுறிகள், தடுப்பு முறைகளின் விளக்கம், பரிசோதனை முறைகள், இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் ஆகிய அனைத்து தகவல்களும் தகுந்த படங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக இந்த கையேடு அதிக எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மக்கள்தொகை அதிகமாக உள்ள ஊராட்சி பகுதிகளில் வீடு, வீடாக விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

A1TamilNews.com

From around the web