சிறுவன் சுஜித் வில்சன் பலி.. அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகள்!

ஆழ்துளை கிணறுகள் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ், ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கான உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரியும், உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். அரசு கொண்டு வரும் விதிகள் பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்றும், ஆழ்துளை
 

சிறுவன் சுஜித் வில்சன் பலி.. அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகள்!ழ்துளை கிணறுகள் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ், ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கான உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரியும், உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும்  உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். அரசு கொண்டு வரும் விதிகள் பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்றும், ஆழ்துளை கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகளுக்கான ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர்.

இதுவரையிலும் எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? பயன்படுத்தப்படாமல் உள்ள கிணறுகளின் எண்ணிக்கை என்ன? விதிகளை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அலட்சிய உயிரிழப்புக்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கினால் மட்டும் இந்த நிலைமைகள் சரியாகி விடுமா? மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகளிடம், நில உரிமையாளர்கள் முறையான தகவல்கள் வழங்குகிறார்களா? என பல்வேறு கேள்விகளை அரசுக்கு முன் வைத்தனர்.

நவம்பர் 21ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து ஊடகங்களும் முயற்சிக்க வேண்டும் என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

ஒவ்வொரு தனி மனிதனும் சமூக பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

-வணக்கம் இந்தியா

From around the web