அற்புத மருத்துவ குணங்களை கொண்ட மருதம் பட்டை!

நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியிலேயே உடலை சீராக இயங்க வைப்பதற்கான அனைத்து மருத்துவப் பொருட்களும் அடங்கியுள்ளன. நம் பாரம்பரிய முறைப்படி அவைகளை உபயோகித்து வர ஆரோக்கிய வாழ்வு வாழலாம். மருதம் பட்டை என்பது ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்தது கிடையாது. நாம் சாதாரணமாக பிரியாணியில், மசாலாப் பொருட்களில் பயன்படுத்துகிற பட்டை தான் மருதம் பட்டை. இந்த மருதம் பட்டையையும், ஆவாரம் பட்டையையும் சம அளவு எடுத்து, ஏலக்காய், சுக்கு சேர்த்து அரைத்து சூரணமாக்கி, காபி, டீ
 

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட மருதம் பட்டை!ம் வீட்டு அஞ்சறைப் பெட்டியிலேயே உடலை சீராக இயங்க வைப்பதற்கான அனைத்து மருத்துவப் பொருட்களும் அடங்கியுள்ளன. நம் பாரம்பரிய முறைப்படி அவைகளை உபயோகித்து வர ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

மருதம் பட்டை என்பது ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்தது கிடையாது. நாம் சாதாரணமாக பிரியாணியில், மசாலாப் பொருட்களில் பயன்படுத்துகிற பட்டை தான் மருதம் பட்டை.

இந்த மருதம் பட்டையையும், ஆவாரம் பட்டையையும் சம அளவு எடுத்து, ஏலக்காய், சுக்கு சேர்த்து அரைத்து சூரணமாக்கி, காபி, டீ குடிக்கும் நேரங்களில் வெந்நீருடன் குடித்து வர நாள்பட்ட சர்க்கரை நோயும் சில வாரங்களிலேயே ஓடி விடும்.

மருதம் பட்டை, சீரகம், சோம்பு, மஞ்சள் சேர்த்து பொடி செய்து அரை டீஸ்பூன் எடுத்து, 400 மில்லி தண்ணீரை 200 மில்லி தண்ணீராக கொதிக்க வைத்து குடித்து வர, இரத்த அழுத்த நோய் உடனடியாக சரியாகும்.

மருதம் பட்டை, வில்வம், துளசி எடுத்து சூரணம் செய்து சாப்பிட்டு வர மன அழுத்தம், ஒற்றை தலைவலி சரியாகும். இதய இரத்த குழாய்களில் உண்டாகும் அடைப்பு, இதய பலவீனம்,இதய வலி போன்ற இதயம் சார்ந்த நோய்களுக்கு மருதம் பட்டை நிரந்தர தீர்வை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மருதம் பட்டை, வெண்தாமரைப் பூ, ஏலக்காய், இலவங்கம் மற்றும் திரிகடுகம் கலந்து, பொடியாக்கி, பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக குடித்து வர இதய நோய் விரைவில் குணமடையும்.

வாய் புண், தொண்டை கமறல் இருப்போர் ஒரு தேக்கரண்டி மருதம் பட்டை பொடியை இரண்டு கப் நீரில் கலந்து, நன்றாகக் கொதிக்க விட்டு, அந்த நீரை வெது வெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கமறல் உடனே சரியாகும். தேன் கலந்து சாப்பிட்டு வர சளி, இருமல், ஆஸ்துமா தொந்தரவுகளிலிருந்து விடுபடலாம்.

A1TamilNews.com

From around the web