ஏற்கனவே 9 பெண்களை வன்கொடுமை செய்த பிரியங்கா குற்றவாளிகள்!

ஐதராபாத்தில் கால்நடைமருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், என்கவுண்ட்டர் செய்யப்பட்ட இருவர், ஏற்கனவே 9 பெண்களை வன்கொடுமை செய்து எரித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஐதராபாத்தில் கால்நடைமருத்துவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரும் காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். தொடர் விசாரணையில் கர்நாடகா , தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பல்வேறு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இவர்கள் நான்கு பேருக்கும் தொடர்பு இருப்பது
 

ஏற்கனவே 9 பெண்களை வன்கொடுமை செய்த பிரியங்கா குற்றவாளிகள்!தராபாத்தில் கால்நடைமருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், என்கவுண்ட்டர் செய்யப்பட்ட இருவர், ஏற்கனவே 9 பெண்களை வன்கொடுமை செய்து எரித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத்தில் கால்நடைமருத்துவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரும் காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். தொடர் விசாரணையில் கர்நாடகா , தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் ‌நடந்த பல்வேறு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இவர்கள் நான்கு பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.

அதில் 9 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த வழக்குகளில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக, இரண்டு பேர் ஒப்புகொண்டதாக ஐதராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க ஒரு குழு கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

https://www.A1TamilNews.com

 

 

From around the web