முதலமைச்சருக்கு ‘காலால்’ கைகு‌லுக்கி மகிழ்ந்த சிறுவன்! வைரலாகும் புகைப்படம்!!

கேரளா: இரு கைகளும் இல்லாத சிறுவன் முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, ‘கால்களால்’ செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். கேரளாவில், பாலக்காடு அருகே கட்டச்சேரியைச் சேர்ந்த சிறுவன் ப்ரணவ். இரு கைகளுமே இல்லாத மாற்றுத்திறனாளியான இவர், கால்களாலேயே அனைத்து வேலைகளையும் செய்யும் இயல்புடையவர். அண்மையில் ‘மஹா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ப்ரணவ் நன்கொடை அளித்திருந்தார். இந்த நல்ல உள்ளத்துக்காக முதலமைச்சர் பினராயி விஜயன் அவரை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது,
 

முதலமைச்சருக்கு ‘காலால்’ கைகு‌லுக்கி மகிழ்ந்த சிறுவன்! வைரலாகும் புகைப்படம்!!கேரளா: இரு‌ கைகளும் இல்லாத‌ சிறுவன் முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து‌, ‘கால்களால்’ செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.

கேரளாவி‌ல், பாலக்காடு அருகே கட்டச்சேரியைச் சேர்ந்த சிறுவன் ப்ரணவ். இரு கைகளுமே இல்லாத மாற்றுத்திறனாளியான இவர், கால்களாலேயே அனைத்து வேலைகளையும் செய்யும் இயல்புடையவர். அண்மையில் ‘மஹா’ பு‌யலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு‌ ப்ரணவ் நன்கொடை அளித்திருந்தார்.

இந்த நல்ல உள்ளத்துக்காக முதலமைச்சர் பினராயி விஜயன் அவரை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது, ப்ரணவ் தனக்கே உரிய பாணியில், தன் கால்களை கைபோல் பயன்படுத்தி, மு‌தலமைச்சருடன் கைகுலுக்கினார். மேலும், முதலமைச்சருடன் சேர்ந்து தனது ஸ்மார்ட்போனில், காலால் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.

https://www.A1TamilNews.com

From around the web