நாராயணசாமியின் தர்ணா தொடர்கிறது… ரகசியமாக வெளியேறி சென்னை சென்றார் ஆளுநர் கிரண் பெடி!

புதுவை: புதுவை துணை நிலை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 2வது நாளை எட்டியுள்ளது. தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி. இந்த நிலையில் இன்று காலை ரகசியமாக சென்னைக்குப் புறப்பட்டார் கிரண் பெடி. சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் பின்னர் டெல்லி செல்லக் கூடும் எனத் தெரிகிறது. “ஆளுநர் கிளம்பினாலும், போராட்டம் தொடரும் என நாராயணசாமி அறிவித்துள்ளார். ஆளுநர் இந்தப் ராட்டத்துக்கு
 

நாராயணசாமியின் தர்ணா தொடர்கிறது… ரகசியமாக வெளியேறி சென்னை சென்றார் ஆளுநர் கிரண் பெடி!புதுவை: புதுவை துணை நிலை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 2வது நாளை எட்டியுள்ளது. தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி.

இந்த நிலையில் இன்று காலை ரகசியமாக சென்னைக்குப் புறப்பட்டார் கிரண் பெடி. சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் பின்னர் டெல்லி செல்லக் கூடும் எனத் தெரிகிறது.

“ஆளுநர் கிளம்பினாலும், போராட்டம் தொடரும் என நாராயணசாமி அறிவித்துள்ளார். ஆளுநர் இந்தப் ராட்டத்துக்கு பயந்துதான் வெளியேறி இருக்கிறார். துணை ராணுவப்படை வந்திருப்பது அவர்களது வேலையை செய்ய. அவர்கள் எங்களை கைது செய்தாலும் கவலை இல்லை. நாங்கள் எங்கள் போராட்டத்தை அமைதியாக தொடர்வோம்*

ஆளுநர் வரும் வரை போராட்டம் தொடரும்,” என்று நாராயணசாமி அறிவித்துள்ளார்.

– வணக்கம் இந்தியா

From around the web