எரிவாயு குழாய் பதிக்க நெற்பயிர்களை அழிப்பதா? தூத்துக்குடியில் ஜி.கே.வாசன் கண்டனம்!

தூத்துக்குடியில் விவசாய நிலத்தில் நெற்பயிர்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்க முயன்றது தவறு. அதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். பல்வேறு விழாக்களில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் பகுதியில் உள்ள நெற்பயிர்களை சேதப்படுத்தி விவசாய நிலங்களில், எரிவாயு குழாய்கள் அமைக்க முயற்சித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஜி.கே.வாசன், எந்த திட்டமாக இருந்தாலும், விளைநிலங்களை சேதப்படுத்துவது என்பது ஏற்புடையது அல்ல. அதுபோன்ற
 

எரிவாயு குழாய் பதிக்க நெற்பயிர்களை அழிப்பதா? தூத்துக்குடியில் ஜி.கே.வாசன் கண்டனம்!தூத்துக்குடியில் விவசாய நிலத்தில் நெற்பயிர்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்க முயன்றது தவறு. அதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

பல்வேறு விழாக்களில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தூத்துக்குடி அருகே  குலையன்கரிசல் பகுதியில் உள்ள நெற்பயிர்களை சேதப்படுத்தி விவசாய நிலங்களில், எரிவாயு குழாய்கள் அமைக்க முயற்சித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ஜி.கே.வாசன், எந்த திட்டமாக இருந்தாலும், விளைநிலங்களை சேதப்படுத்துவது என்பது ஏற்புடையது அல்ல. அதுபோன்ற தவறுகளை எதிர்க்க கூடிய கட்சியாகத்தான் தமிழ் மாநில காங்கிரஸ் செயல்படும். தமிழகம் முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட கூடாது என்பதில் தமாகா உறுதியாக உள்ளது என்றார்.

பேட்டியின் போது பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராம்பாபு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமாகா தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

http://www.A1TamilNews.com

From around the web