ஜூலை மாதமும் இலவச ரேஷன் பொருட்கள்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
ஊரடங்கு அமல்பட்டது முதல் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை இலவசமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. ஜூலை மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அரிசி அட்டைதாரர்களுக்கு 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய், நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசியும் நியாயவிலைக் கடைகள் மூலம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.
தடை செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு வீடுகளுக்கே அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்குரிய அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலையின்றி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
6.7.2020 – 9.7.2020 வரை அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். pic.twitter.com/dIqvS8bCDJ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 3, 2020