அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா! பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்! கொண்டாட்டத்தில் அயோத்தி!
ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆகஸ்ட் 5ம்) தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இன்று சுபமுகூர்த்தம் 32 வினாடிகள் மட்டுமே, அதாவது 12:44:08 முதல் 12:44:40 மணி வரை மட்டுமே நீடிக்கும் என்று கூறியுள்ளனர். இந்நிகழ்விற்கு 175 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். நரேந்திர மோடி , ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் , அறக்கட்டளைத் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் மகாராஜ் , உத்தரபிரதேச ஆளுநர்
Aug 5, 2020, 16:00 IST
ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆகஸ்ட் 5ம்) தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இன்று சுபமுகூர்த்தம் 32 வினாடிகள் மட்டுமே, அதாவது 12:44:08 முதல் 12:44:40 மணி வரை மட்டுமே நீடிக்கும் என்று கூறியுள்ளனர். இந்நிகழ்விற்கு 175 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
நரேந்திர மோடி , ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் , அறக்கட்டளைத் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் மகாராஜ் , உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஐந்து பேர் மட்டுமே மேடையில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அயோத்தி நகர் முழுவதும் மின்விளக்குகளில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.