அதிர்ச்சி! முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவால் உயிரிழந்த பரிதாபம்!
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவ பணியாளர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என்ற எந்த வித பாகுபாடிமின்றி கொரோனா பரவி வருகிறது.
அந்த வரிசையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வத முன்னாள் அமைச்சர் ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. முன்னாள் அமைச்சர் ஏழுமலை சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சிகிச்சைப் பலனின்றி ஏழுமலை உயிரிழந்தார் . அவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.