முதன் முதலாக ஆன்-லைனில் என்ஜினியரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு!
சென்னை : அண்ணாபல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்விற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று விண்ணப்பப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில் ஆன்- லைன் மூலம் கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு நடைபெறுவது இதுவே முதன் முறை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 562 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. அல்லது பி.டெக். படிப்புகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 60
May 3, 2018, 11:58 IST
சென்னை : அண்ணாபல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்விற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
தமிழகத்தில் ஆன்- லைன் மூலம் கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு நடைபெறுவது இதுவே முதன் முறை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 562 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. அல்லது பி.டெக். படிப்புகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
Attachments