ப்ளீஸ்.. வீட்டிலிருந்தபடியே இதைப் ஃபாலோ பண்ணுங்க! மருத்துவர்கள் அட்வைஸ்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் தொடர்ந்து அமலில் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்திலும், உடலில் சுறுசுறுப்பு இருந்தால் தான் உள்ளம் உற்சாகமாக செயல்பட முடியும். சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை உற்சாகம் கொடுக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். உண்மையில் தற்போதைய ஊரடங்கு உறவுகளைச் சேர்க்கவில்லை. ஒவ்வொருவரையும் சுய தனிமைக்கு தள்ளியிருக்கிறது. சோம்பலை உருவாக்கியிருக்கிறது. பெரும்பாலானோர் ஒரே
 

ப்ளீஸ்.. வீட்டிலிருந்தபடியே இதைப் ஃபாலோ பண்ணுங்க! மருத்துவர்கள் அட்வைஸ்!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு  தளர்த்தப்பட்ட நிலையில் தொடர்ந்து அமலில் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப் பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்திலும், உடலில் சுறுசுறுப்பு இருந்தால் தான் உள்ளம் உற்சாகமாக செயல்பட முடியும். சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை உற்சாகம் கொடுக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். உண்மையில் தற்போதைய ஊரடங்கு உறவுகளைச் சேர்க்கவில்லை. ஒவ்வொருவரையும் சுய தனிமைக்கு தள்ளியிருக்கிறது.

சோம்பலை உருவாக்கியிருக்கிறது. பெரும்பாலானோர் ஒரே நாள் சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்து அவனில் சுடவைத்து சாப்பிடுகின்றனர். இப்படிச் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம் என பிரபல மருத்துவர் டாக்டர் ஷரத் சர்மா கூறியுள்ளார்.

மேலும் ஊரடங்கு காலத்திலும் உடலுக்கு சரியான ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து மிக முக்கியம். சீரான உணவு, தேவையான ஓய்வு எடுத்துக் கொள்பவர்கள் மட்டுமே ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்க முடியும்.

பதப்படுத்தப்பட்ட அல்லது ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள் தொற்று நோய்களின் அபாயத்தை உருவாக்க வல்லவை. ஒவ்வொரு நாளும் தேவையான வகையில் புதிய மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகளையே சாப்பிட வேண்டும்.

தினசரி உணவில் தானிய வகைகள் அல்லது பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 5 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும் . அதிக எடை உள்ளவர்கள் குளிர்பானங்கள் ,எண்ணெய் அதிகமுள்ள உணவுகள் ,அதிக சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு சேர்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாலும் அவ்வப்போது வீட்டிலேயே நடக்கலாம்.
ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, குறைந்தது கை கால்களையாவது நீட்டி மடக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் மன அழுத்தத்தை குறைக்காவும், உடலின் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கவும் உதவும்.

A1TamilNews.com

From around the web