திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ப சிதம்பரம்!

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த 21-ந்தேதி அவரை சிபிஐ கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. 5-வது முறையாக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவலை 5-ந்தேதி (நேற்று)
 

திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ப சிதம்பரம்!டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த 21-ந்தேதி அவரை சிபிஐ கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. 5-வது முறையாக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவலை 5-ந்தேதி (நேற்று) வரை நீட்டித்து கடந்த 3-ந்தேதி தனி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரை தனி நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். நேற்று காலை உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கில் ப சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றிய தகவலை தெரிவித்தார். ப.சிதம்பரத்தை காவலில் வைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் தற்போது செயலிழந்து விட்டதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க கோரும் மனுவை தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருப்பதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், அவரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்கள்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹர், சிபிஐ மனு மீதான உத்தரவை சிறிது நேரத்துக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துவிட்டு தனது அறைக்குள் சென்றார்.

சுமார் 1 மணி நேரம் கழித்து மீண்டும் வந்து தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி, ப சிதம்பரத்தை வருகிற 19-ந்தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ப சிதம்பரத்தின் வக்கீல் கபில் சிபல், மனுதாரர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவதால் இடைக் கால ஜாமீன் கோரும் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் சிறையில் ப சிதம்பரத்துக்கு தேவையான மூக்கு கண்ணாடி, மருந்துகள், மேற்கத்திய பாணியிலான கழிவறை வசதி, ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு மற்றும் கட்டில், குளியல் அறை ஆகிய வசதிகளை கொண்ட தனி அறை ஆகியவற்றை வழங்க கோரி சிதம்பரம் தரப்பில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு சிபிஐ தரப்பில், ப.சிதம்பரம் கோரும் அனைத்து வசதிகளையும் அளிக்க தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும், சிறை விதிமுறைகளின்படி அவருக்கு தேவையான வசதிகளை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.

ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் அவரை வாகனத்தில் ஏற்றி டெல்லியில் உள்ள திகார் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள சிறை எண் 7-ல் தனி அறையில் அவர் அடைக்கப்பட்டார். சிறை எண் 7 பொருளாதார குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறை ஆகும்.

– வணக்கம் இந்தியா

From around the web