முதலமைச்சரின் சொத்து மதிப்பு இரு மடங்காக அதிகரிப்பு! யார் தெரியுமா?

மும்பை: மஹாராஷ்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் சொத்து மதிப்பு கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இருமடங்காக உயர்ந்திருப்பது அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலிருந்து தெரியவந்துள்ளது. தமது சொத்து மதிப்பு மூன்று கோடியே 89 லட்சம் ரூபாய் என அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். பாஜக அமைச்சரவையின் முதலமைச்சராக கடந்த ஐந்தாண்டுகளாக பதவி வகுத்து வருகிறார் பட்னாவிஸ். வரும் 21ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது
 

முதலமைச்சரின் சொத்து மதிப்பு இரு மடங்காக அதிகரிப்பு! யார் தெரியுமா?

மும்பை: மஹாராஷ்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் சொத்து மதிப்பு கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இருமடங்காக உயர்ந்திருப்பது அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலிருந்து தெரியவந்துள்ளது.

தமது சொத்து மதிப்பு மூன்று கோடியே 89 லட்சம் ரூபாய் என அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். பாஜக அமைச்சரவையின் முதலமைச்சராக கடந்த ஐந்தாண்டுகளாக பதவி வகுத்து வருகிறார் பட்னாவிஸ். வரும் 21ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்புமனு தாக்கல் செய்யும்போது தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை தேவேந்திர பட்னாவிஸ் சமர்ப்பித்துள்ளார். அதில் மூன்று கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் வங்கி கணக்கில் எட்டு லட்சத்து 29 ஆயிரத்து 665 ரூபாய் இருப்பதாகவும், ரொக்கமாக 17 ஆயிரத்து 500 ரூபாய் தொகை கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு வேட்புமனுவில் அசையா சொத்து ஒரு கோடியே 81 லட்சம் ரூபாய் இருப்பதாக பட்னாவிஸ் குறிப்பிட்டிருந்தார். இதேப்போல் வங்கி கணக்கில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 630 ரூபாய் இருப்பதாக கடந்த 2014ஆம் தேர்தலின் போது தனது வேட்புமனுவில் பட்னாவில் குறிப்பிட்டிருந்தார்.

– வணக்கம் இந்தியா

From around the web