30 ஆண்டுகளுக்குப் பின் நிகழவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்!

தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே தெரியவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் வரும் 26 ஆம் தேதி நிகழவுள்ளது. இதைக் காண கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சில மணி நேரங்கள் சந்திரன், சூரியனை மறைத்து கடந்து செல்லும் நிகழ்வே சூரிய கிரகணம் எனப்படுகிறது. இதில் சந்திரன் முழுவதுமாக சூரியனை மறைத்துச் சென்றால் அது முழு சூரிய கிரகணம் என்றும், சூரியனின் உள் வட்டத்திற்குள்
 

30 ஆண்டுகளுக்குப் பின் நிகழவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்!

 

தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே தெரியவிருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் வரும் 26 ஆம் தேதி நிகழவுள்ளது. இதைக் காண கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சில மணி நேரங்கள் சந்திரன், சூரியனை மறைத்து கடந்து செல்லும் நிகழ்வே‌ சூரிய கிரகணம் எனப்படுகிறது. இதில் சந்திரன் முழுவதுமாக சூரியனை மறைத்துச் சென்றால் அது முழு சூரிய கிரகணம் என்றும், சூரியனின் உள் வட்டத்திற்குள் ஊடுருவிச் சென்றால் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. அவ்வாறான நெருப்பு வளைய சூரிய கிரகணமே, கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான 26 ஆம் தேதி நிகழவுள்ளது. இது தென்தமிழகத்தில் கோவை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டுமே முழுமையாக தென்படும்.

இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணமானது டிசம்பர் 26 ஆம் தேதி காலை 8 மணி 36 நிமிடத்தில் தொடங்கி 11 மணி 12 நிமிடங்களுக்கு நிறைவு பெறுகிறது. 9 மணி 33 நிமிடத்திற்கு கிரகணம் உச்ச நிலையை அடையும் என வான் இயற்பியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்றும், பிரத்யேகமான சூரியக் கண்ணாடி வழியாகவே பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 30 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் இந்த அதிசய கிரகணத்தை மீண்டும் காண, 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

https://www.A1TamilNews.com

From around the web