வரும் திங்கள் முதல் உள்நாட்டு விமான சேவை! மத்திய மந்திரி அறிவிப்பு!

கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் பொது போக்குவரத்துக்களான ரயில், பேருந்து, விமான சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மே25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்கலாம் என மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் அறிவித்துள்ளார். முதல் கட்ட ஊரடங்கில் திடீரென விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்தவர்களுக்கு, கட்டணங்கள் திருப்பி அளிக்கப்பட்டன. நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களும்,
 

வரும் திங்கள் முதல் உள்நாட்டு விமான சேவை! மத்திய மந்திரி அறிவிப்பு!கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் பொது போக்குவரத்துக்களான ரயில், பேருந்து, விமான சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.

நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மே25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்கலாம் என மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

முதல் கட்ட ஊரடங்கில் திடீரென விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்தவர்களுக்கு, கட்டணங்கள் திருப்பி அளிக்கப்பட்டன. நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களும், விமானம் தொடர்பான சேவை நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு சேவை தொடங்கிய பிறகு படிப்படியாக விமான சேவை முழு அளவில் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web