கவிஞர் நா.முத்துக்குமார் பெயரை இருட்டடிப்பு செய்யும் பாரதிராஜா?

பாரதிராஜா இயக்கத்தில் நீண்டநாள் தயாரிப்பாக இருந்து வரும் படமான “மீண்டும் ஒரு மரியாதை” பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வர உள்ளது. வயதான வேடத்தில் நடிக்கும் பாரதிராஜாவுக்கும் இள வயது பெண்ணுக்கும் ஏற்படும் நெருக்கம் தான் கதையின் கரு என கூறப்படுகிறது. 2016ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இந்தப் படத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் “ஓம்” என்பதாகும். பல இழுபறிகளுக்குப் பின்னர் திரையை எட்டிப்பார்க்க உள்ளது. இந்தப் படத்தின் விளம்பரத்தில் பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து
 

கவிஞர் நா.முத்துக்குமார் பெயரை இருட்டடிப்பு செய்யும் பாரதிராஜா?பாரதிராஜா இயக்கத்தில் நீண்டநாள் தயாரிப்பாக இருந்து வரும் படமான “மீண்டும் ஒரு மரியாதை” பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வர உள்ளது. வயதான வேடத்தில் நடிக்கும் பாரதிராஜாவுக்கும் இள வயது பெண்ணுக்கும் ஏற்படும் நெருக்கம் தான் கதையின் கரு என கூறப்படுகிறது.

2016ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இந்தப் படத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் “ஓம்” என்பதாகும். பல இழுபறிகளுக்குப் பின்னர் திரையை எட்டிப்பார்க்க உள்ளது.

இந்தப் படத்தின் விளம்பரத்தில் பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன், சாலை சகாதேவேன், சபேஷ்- முரளி பெயர்கள் அதே வரிசையில் உள்ளன. இரண்டாவது வரிசையில் மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து என்று பெயர்ப் பட்டியல் நீள்கிறது. வைரமுத்து பெயருக்கு அடுத்து நா.முத்துக்குமார் பெயர் இடம் பெறுவது தானே முறையானது.

ஆனால் வைரமுத்துவின் இரு மகன்களின் பெயருக்கு இடையே இரண்டாவது வரிசையில் நா.முத்துக்குமார் பெயரை போட்டிருப்பது இருட்டடிப்புச் செயல் தானே!. முத்துக்குமார் எழுதியது ஒரு பாடல் மட்டுமே என்பதால் இந்த பெயர் வரிசை என்று ஒரு சாரார் கூறுகின்றனர். வாலியோ, வைரமுத்துவோ ஒரு பாட்டு மட்டும் எழுதியிருந்தால் இப்படிப் பண்ணுவாங்களா?

“ஓம்” படத்திற்காக அமெரிக்காவிலிருந்து, பாரதிராஜா கேட்டவுடன் உடனடியாக பாடல் எழுதி அனுப்பி வைத்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். ஹார்வர்ட் தமிழ் இருக்கை விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டல் நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த கவிஞர் நா.முத்துக்குமாரை தொடர்பு கொண்டு பாடலுக்கான சூழலை விவரித்துள்ளார் பாரதிராஜா. என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடலுக்கான ட்யூனையும் அனுப்பி வைத்துள்ளனர்

உடனடியாக, அங்கிருந்தே பாடலை எழுதி அனுப்பியிருக்கிறார் முத்துக்குமார். அதை பின்னணிப் பாடகியை வைத்து ஒலிப்பதிவு செய்து முத்துக்குமாருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பிய சில மாதங்களிலேயே கவிஞர் முத்துக்குமாரின் திடீர் மறைவால் திரையுலகமும், இலக்கிய உலகமும் உறைந்து போனது. அவர் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் முத்துக்குமார் பாடல் எழுதிய ”மீண்டும் மரியாதை” என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ள “ஒம்” படம் இப்போது வெளியாக உள்ளது படத்தின்
விளம்பரத்தில் முத்துக்குமாரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

படத்தில் முத்துக்குமார் எழுதிய “ஆசை வெச்சேன் மீசை மேலே… மீசை வெச்ச மாமன் மேலே” என்ற பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

பாரதிராஜா இப்படிச் செய்யலாமா என்று கவிஞர் நா.முத்துக்குமாருக்கு நெருக்கமானவர்கள் வருத்தமடைந்துள்ளனர். தவறைச் சரி செய்வாரா இயக்குனர் இமயம் பாரதிராஜா?

http://A1TamilNews.com

From around the web