“அத்தியாவசியத் தேவைக்கு அழையுங்கள்” களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்!
கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் அல்லல்படுபவர்களுக்கு திமுக இளைஞரணி உதவிக்கரம் நீட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
“கொரோனா பேரிடரால் மத்திய-மாநில அரசுகள் பிறபித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில். அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவோர் 93618 63559 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்… உங்களுக்கு உதவ தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் தயாராக உள்ளனர்,” என்று ட்விட்டர் மூலம் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொரோனா பேரிடரால் மத்திய-மாநில அரசுகள் பிறபித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில். அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவோர் 93618 63559 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்… உங்களுக்கு உதவ தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் தயாராக உள்ளனர். @dmk_youthwing
— Udhay (@Udhaystalin) March 29, 2020