தல போல வருமா? நடிகர் அஜீத்-க்கு திமுக எம்.எல்.ஏ. பாராட்டு!!
நடிகர் அஜீத்குமாருக்கு திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜீத் கார் மற்றும் பைக் ரேஸ்களில் மிகவும் ஆர்வம் கொண்டவர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்னதாக பல ரேஸ்களில் பங்கேற்று வெற்றி பெற்றவர். பிரபல நடிகர் ஆன பிறகும் ரேஸ்களில் பங்கேற்றுள்ளார்.
அஜீத் வட இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், என்னுடைய பிரபலம் என்ற அடையாளத்தின் மூலம் என்னுடைய ரசிகர்கள் மற்றும் இளைஞர்களை கார் ரேஸிங் தொடர்பான ஆர்வம் ஏற்படுத்த பயன்படுத்துவேன்.
அவர்களில் ஒருவர் நாளை நரேன் கார்த்திகேயனாக வரலாம். இந்தியாவில் எஃப்1 ரேஸ் குழு உருவாகும் என்று யாராவது எதிர்பார்த்து இருப்பார்களா? இன்று இருக்கிறார்கள். இன்னும் இந்த விளையாட்டு உயர வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். நானும் இதே இடத்தில் தான் கார் ரேஸை தொடங்கினேன் என்று கூறியுள்ளார். இந்த பேட்டி சென்னைக்கு அருகே உள்ள ஒரு கார் ரேஸ் மைதானத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ க்ளிப்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ள திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜா, மிகவும் அரியதான இந்த பேட்டி, அஜீத்குமாருக்கு விளையாட்டு மீதும் கார் ரேஸிங் மீதும் உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. அவருடைய இதயம் இன்னும் கார் ரேஸ் ட்ராக்குகள் மீதே உள்ளது.
இவரைப் போல் எல்லா பிரபலங்களும் தங்களுடைய பிரபலம் என்ற அடையாளத்ஹை, இந்தியாவின் விளையாட்டுத் துறை முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும். தல போல வருமா! என்று ட்வீட்டில் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
This RARE interview showcases the passion #AjithKumar has for the #sport of #Racing ! One can clearly see that his heart remains on the tracks !
I hope all #celebrities emulate him & use their #Celebrity status to support #Sports in #India !!!#ThalaPolaVaruma#ThalaAjith #Thala https://t.co/wYhcrAfTzP— T R B Rajaa (@TRBRajaa) August 1, 2020
திமுகவின் அடுத்தக் கட்ட இளையதலைமுறை தலைவர்களில் முக்கியமான ஒருவராக விளங்கும் ராஜா முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் ஆவார். தேர்தல் விரைவில் வர உள்ள நேரத்தில் நடிகர் அஜீத்தை பாராட்டியுள்ளதற்கு பின்னணியில் அரசியல் இருக்குமோ என்ற கேள்விகளும் எழுகிறது.