இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு!

சென்னை: பரியேறும் பெருமாள் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார். அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஆனந்தி வட தமிழகத்து கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். தினேஷுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமையும் என்று ரஞ்சித் கூறியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் டென்மாவின் இசையில் ‘நிலமெல்லாம் ‘ என்கிற பாடல் இன்று வெளியாகியுள்ளது. சித்திரசேனன், அறிவு, கானாமுத்து, ஏழுமலை மற்றும் பேராவூர்
 

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு!

சென்னை: பரியேறும் பெருமாள் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.

ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார். அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஆனந்தி வட தமிழகத்து கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். தினேஷுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமையும் என்று ரஞ்சித் கூறியுள்ளார்.

அறிமுக இசையமைப்பாளர் டென்மாவின் இசையில் ‘நிலமெல்லாம் ‘ என்கிற பாடல் இன்று வெளியாகியுள்ளது. சித்திரசேனன், அறிவு, கானாமுத்து, ஏழுமலை மற்றும் பேராவூர் ரூபகம் கலைக்குழுவினர் பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் உமாதேவி எழுதியிருக்கிறார்.

புதிய பாடகர்களை முதல் படத்திலேயே பாட வைப்பதன் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தர முடியும் என்கிறார் அறிமுக இசையமைப்பாளர் டென்மா.

வட தமிழகத்து பின்னணியில் சமூகம், அரசியல் சார்ந்த கதைக் களத்தில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் இருக்கும் என்று இயக்குனர் அதியன் ஆதிரை கூறியுள்ளார்.

 

From around the web