மென்பொருள் நிறுவன தூதரானார் டோணி

டெல்லி : ஜெர்மனியில் உள்ள வார்டுவிஷ் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் டோணி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு தோனியை தூதராக 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. டோணியை தூதராக நியமித்ததன் மூலம் இந்தியாவில் திறம்பட செயல்பட முடியும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து டோணி கூறியதாவது, “வார்டுவிஷ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய யோசனை மற்றும் இந்த நிறுவனமும் இணைந்து செயல்படுவோம்” என்றார். இதுமட்டுமல்லாமல் டோணி
 

டெல்லி : ஜெர்மனியில் உள்ள வார்டுவிஷ் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் டோணி நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு தோனியை தூதராக 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. டோணியை தூதராக நியமித்ததன் மூலம் இந்தியாவில் திறம்பட செயல்பட முடியும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து டோணி கூறியதாவது, “வார்டுவிஷ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய யோசனை மற்றும் இந்த நிறுவனமும் இணைந்து செயல்படுவோம்” என்றார்.

இதுமட்டுமல்லாமல் டோணி புனேவை சேர்ந்த இண்டிகோ பெயின்ட் நிறுவனத்தின் தூதராகவும்,  ரன் ஆதாம் நிறுவனத்தின் ஆலோசகராகவும், தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

– வணக்கம் இந்தியா

From around the web