சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரனுக்கு தூக்கு!

கோவையில் 7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி நடந்தது அந்த கொடூர சம்பவம். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல்போன 7வயது சிறுமி, கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதுதான் கொடூரத்தின் உச்சம். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் விசாரணை நடத்திய காவல்துறையினர்,
 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரனுக்கு தூக்கு!

கோவையில் 7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி நடந்தது அந்த கொடூர சம்பவம். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல்போன 7வயது சிறுமி, கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதுதான் கொடூரத்தின் உச்சம்.

மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர். கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

கடந்த 19ஆம் தேதி அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது. ஒருபாவமும் அறியாத சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் என்ன தீர்ப்பு வரப்போக்கிறது என தமிழகமே எதிர்பார்த்திருந்த நிலையில், சந்தோஷ்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

https://www.A1TamilNews.com

 

From around the web