குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் திருமணம்!

சென்னையில் வண்ணாரப் பேட்டையில் என்.ஆர்.சி, சி.ஏ.ஏ மற்றும் என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இளம் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷைன்ஷா, சுமையா தம்பதியினருக்கு திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் அங்கே வெடித்ததால், அவர்களுடைய திருமணம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டது. ஆனால், நிச்சயித்த நாளில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர் தம்பதியினர். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டக் களத்திலேயே திருமணம் செய்து
 

குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் திருமணம்!சென்னையில் வண்ணாரப் பேட்டையில் என்.ஆர்.சி, சி.ஏ.ஏ மற்றும் என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இளம் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷைன்ஷா, சுமையா தம்பதியினருக்கு திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் அங்கே வெடித்ததால், அவர்களுடைய திருமணம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டது.

ஆனால், நிச்சயித்த நாளில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர் தம்பதியினர். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டக் களத்திலேயே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

என்.ஆர்.சி. சி.ஏ.ஏ மற்றும் என்.பி.ஆர் சட்டங்கள் வேண்டாம் என்ற பதாகையை கையில் ஏந்தியபடி திருமணம் செய்து கொண்டார்கள்.

http://www.A1TamilNews.com

From around the web