அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு கொரோனா !மியாட் மருத்துவமனையில் அனுமதி!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. ஏற்கனவே அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர் தவிர மேலும் 8 எம்எல்ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது குடும்பத்தில் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை மணப்பாக்கத்தில்
 

அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு கொரோனா !மியாட் மருத்துவமனையில் அனுமதி!மிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது.

ஏற்கனவே அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர் தவிர மேலும் 8 எம்எல்ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வரிசையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது குடும்பத்தில் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செல்லூர் ராஜுவை திமுக தலைவர் முகஸ்டாலின் தொலைபேசியில் நலம் விசாரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜூ விரைவில் நலம் பெற வேண்டும். எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web