முகக்கவசம் வேண்டாம் எனக் கூறிய பிரேசில் அதிபருக்கு கொரோனா!

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. பிரேசில் அதிபர் கொரோனாவிற்கு எதிரான முறையில் மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்து வந்தார். தற்போது பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப அறிகுறிகளுடன் இருப்பதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி அலுவலக பணிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக செய்து வருகிறார். இந்நிலையில், பேஸ்புக் மூலம் மக்களிடையே நேரலையில்
 

முகக்கவசம் வேண்டாம் எனக் கூறிய பிரேசில் அதிபருக்கு கொரோனா!சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது.

பிரேசில் அதிபர் கொரோனாவிற்கு எதிரான முறையில் மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்து வந்தார். தற்போது பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப அறிகுறிகளுடன் இருப்பதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி அலுவலக பணிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக செய்து வருகிறார்.

இந்நிலையில், பேஸ்புக் மூலம் மக்களிடையே நேரலையில் பேசிய அதிபர், தனக்கு கடந்த வார இறுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்தே, தினமும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

‘தற்போது உடல் நிலை சீரடடையத் தொடங்கி இருக்கிறது. கடவுளுக்கு நன்றி.மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின், பல்வேறு நாடுகளில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 17.6லட்சம் பேர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69254 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web