கிராமங்களுக்குப் பரவும் கொரோனா! அரசு நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கும் நிலையில், தென் மாவட்டங்களுக்கு சென்னை மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பரவி வருகிறது. மாவட்ட தலைநகர் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கொரோனா பரவி வருவதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “தி.மு.க. சார்பில், மாவட்ட வாரியாக கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, நோய்க்கு உள்ளானோரின் மருத்துவமனைவாரியான எண்ணிக்கை, கொரோனா நோய்ப் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, இறந்தோரின் எண்ணிக்கை, பெரும் பாதிப்பிற்குள்ளான
 

கிராமங்களுக்குப் பரவும் கொரோனா! அரசு நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்!தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கும் நிலையில், தென் மாவட்டங்களுக்கு சென்னை மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பரவி வருகிறது. மாவட்ட தலைநகர் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கொரோனா பரவி வருவதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“தி.மு.க. சார்பில், மாவட்ட வாரியாக கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, நோய்க்கு உள்ளானோரின் மருத்துவமனைவாரியான எண்ணிக்கை, கொரோனா நோய்ப் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, இறந்தோரின் எண்ணிக்கை, பெரும் பாதிப்பிற்குள்ளான நகரங்களில் இருந்து மாவட்டங்களுக்குச் சென்றோரின் எண்ணிக்கை, மருத்துவமனை வாரியாக கொரோன நோய்த் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாவட்ட கலெக்டரிடம் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கேட்டார்கள்.

அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆகவே, இன்றைக்கு மீண்டும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களை கொரோனா நோய் குறித்து தகவல்கள் கோரி 32 மாவட்ட கலெக்டர்களிடம் மனுக்களைக் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

இந்நிலையில் மற்ற மாவட்டங்களில், குறிப்பாக மருத்துவக் கட்டமைப்பு பெருமளவில் இல்லாத கிராமங்களில் கொரோனாவை எதிர்கொள்ளத் தேவையான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் உடனடியாக அ.தி.மு.க. அரசு ஏற்படுத்திட வேண்டும்.

கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, கொரோனா நோய்க்கு உள்ளானோருக்கு சிகிச்சை அளிக்கப் படுக்கை வசதிகளை அதிகரிப்பது, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நோய் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு முறைப்படியான மருத்துவ உதவிகளைச் செய்வது, வெண்டிலேட்டர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, அறிகுறி அல்லது அறிகுறி இல்லாத நோய்த் தொற்றாளர்களை கண்டுபிடிக்கத் தீவிர பரிசோதனையை முடுக்கி விடுவது, கொரோனா முன்கள வீரர்களுக்குத் தேவையான சுய மருத்துவ உபகரணங்கள், முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற அவசரகாலப் பணிகளில் இனியும் காலதாமதம் செய்யாமல் அ.தி.மு.க. அரசு ஈடுபட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தின் கிராமப்புறங்களில் தீவிரமாகப் பரவும் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க, கண்டுபிடிக்க, சிகிச்சையளிக்க விரிவான, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டிட வேண்டும் என்றும், மக்களுக்கு விழிப்புணர்வு, தேவையான மருத்துவக் கட்டமைப்பு, முன்னணி கள வீரர்களுக்குப் பாதுகாப்பு ஆகிய முக்கியமான மூன்றையும் உறுதி செய்திட வேண்டும் என்றும் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

“நோய்த் தொற்றுப் பரவல் அதுவாகவே தணியட்டும்; அப்போது நம்மால்தான் தடுக்கப்பட்டுத் தணிந்தது, குறைந்தது என்று புகுந்து பெயர் எடுத்துக் கொள்ளலாம்“ என நினைத்து, உடனடியாகத் திட்டமிட்டு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தால், ஆபத்தான கட்டத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது என்பதை உணர வேண்டும். இதை நான் விடுக்கும் எச்சரிக்கையாகக் கொண்டு, மக்களைக் காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என விரும்புகிறேன்.”

கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப் படுத்தாவிட்டால் தமிழகம் மிகப்பெரும் ஆபத்தான சூழ்நிலையை நோக்கிச் செல்லும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web