சுதந்திர தின அணிவகுப்பு! சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிய முதலமைச்சர் !

இன்று காலை 8.45 மணிக்கு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூவர்ண தேசியக் கொடியை அவர் ஏற்றி வைத்தார். இந்தியாவின் 74 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடியும், மாநிலங்களில் முதலமைச்சர்களும் தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார்கள். சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர். கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை
 

சுதந்திர தின அணிவகுப்பு! சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிய முதலமைச்சர் !இன்று காலை  8.45 மணிக்கு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மூவர்ண தேசியக் கொடியை அவர் ஏற்றி வைத்தார்.

இந்தியாவின் 74 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடியும், மாநிலங்களில் முதலமைச்சர்களும் தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார்கள்.

சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,  காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.

கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8.33 மணிக்கு வந்திறங்கினார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்றார்.

தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோரக் காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் – ஒழுங்கு) கே.ஜெயந்த் முரளி ஆகியோரை  முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தலைமைச் செயலாளர் சண்முகம் மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் , திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார்

அதைத் தொடர்ந்து 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்தபடி மூவர்ண தேசியக் கொடியை அவர் ஏற்றி வைத்தார். நான்காவது தடவையாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web