‘அண்ணாத்த’ படத்தின் முதல் சிங்கிள்... அக்டோபர் 4-ம் தேதி வெளியாகிறது

 
Annaththe

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கள் அக்டோபர் 4-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் ‘அண்ணாத்த’  படத்தின் முதல் சிங்கிள் அக்டோபர் 4-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  இந்த பாடலை பாடியுள்ளார்.  

இந்த நிலையில் டி.இமான் இசையில் கவிஞர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பி பாடியுள்ளதால் பர்ஸ்ட் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

From around the web