எனது பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையன் மீது எனக்கு இஷ்டம் - நடிகை மேகா ஆகாஷ்

 
Megha-Akash

எனது பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையன் மீது எனக்கு இஷ்டம் இருந்தது என்று நடிகை மேகா ஆகாஷ் கூறியுள்ளார்.

தமிழில் ரஜினியின் பேட்ட படம் மூலம் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜய்சேதுபதியுடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடித்து வருகிறார். மேகா ஆகாஷ் அளித்துள்ள பேட்டியில், “பெண்ணாக பிறந்தால் அப்பா, அம்மா அன்பு, திருமணம் ஆனபிறகு கணவரின் அன்பு அதன்பிறகு குழந்தைகள் அன்பு என்று அனேக அன்புகளை படிப்படியாக பார்க்க வேண்டி இருக்கிறது. நம்மை நல்ல மனிதர்களாக வளர்த்து விடுவது பெற்றோர் காட்டும் அன்புதான்.

அன்பு என்பது பெரிய விஷயம். மிகவும் சிறந்தது. அதில் சுயநலம் கிடையாது. பையனும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்தால் அது காதல் கிடையாது. நான்காம் வகுப்பில் எனது பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையன் மீது எனக்கு இஷ்டம் இருந்தது. அதுதான் எனது முதல் காதல். காதல் என்றால் என்ன என்று தெரியாத வயது அது. நிஜ வாழ்க்கையில் நான் காதல் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்றார்.

From around the web