மீண்டும் இணையும் தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி..! அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்
Apr 23, 2021, 18:20 IST
கர்ணன் படத்தை தொடர்ந்து, மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இப்படம் வெளியானது முதலே படத்தை வரவேற்று விமர்சனங்கள் வெளிவந்தன. அதேபோல் வசூலில் இப்படம் சாதனை படைத்து வருகிறது. கர்ணன் திரைப்படம் கொடியன்குளம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார்.
இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். தற்போது, பிரீ புரொடெக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், படபிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் எனவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.